ரிஸ்வான் தலைமையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிண்ணத்தை சுவீகரித்த முல்தான் சுல்தான் அணி!

Date:

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஆண்டுதோறும் பெப்ரவரி-மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் சூப்பர் லீக் இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக 2021 சீசன் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது.

பயோ-பபுள் தோல்வியடைந்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தொடர் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அதன்பின் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்து கடந்த 9ஆம் திகதி இப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் முஹம்மத் ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ், வஹாப் ரியாஸ் தலைமையிலான பெஷாவர் சல்மி அணிகள் களமிறங்கியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெஷாவர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய முல்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ஓட்டங்களை குவித்தது. ஷொய்ப் மக்சூத் 35 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரி உட்பட 60 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். அதிரடியாக ஆடிய ரசோவ் 21 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 50 ரன்களை குவித்திருந்தார்.

பெஷாவர் அணி சார்பில் சமீன் குல், மொகமது இம்ரான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 207 என்ற ஓட்ட இலக்கை அடைய வெற்றி இலக்குடன் பெஷாவர் அணி களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் பெஷாவர் அணி 9 விக்கெட்டுக்கு 159 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. இதனால் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தனர்.

பெஷாவர் அணியில் அதிகபட்சமாக ஷொய்ப் மாலிக் 48 ஓட்டங்கள், கம்ரான் அக்மல் 36 ஓட்டங்கள், ரோவான் பாவெல் 23 ஓட்டங்களை குவிந்திருந்தனர்.

முல்தான் அணி சார்பில் தாஹிர் 3 விக்கெட் இம்ரான் கான், முசாராபானி தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர் என்பது சிறப்பம்சமாகும்.

இதன்மூலம் முல்தான் சுல்தான் அணி முதல் முறையாக பாகிஸ்தான் சூப்பர் லீக் சாம்பியன் பட்டத்தை சூடிக்கொண்டது. ஷொய்ப் மக்சூத் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...