அனுமதியின்றி செயற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மேல்மாகாண வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

Date:

மேல் மாகாணத்தில் வர்த்தகர்கள், பொது மக்களை அனுமதியின்றி செயற்பட வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.

மேல் மாகாணத்தில் அனுமதியின்றி செயற்பட்ட திரையரங்குகள், உணவகங்கள், நீச்சல் தடாகங்கள், உள்ளிட்ட 313 இடங்கள் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது 605 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

காவல்துறையின் அனுமதியின்றி செயற்படுவோருக்கும்,சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற தவறுவோருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார்.

குறிப்பாக வர்த்தகர்கள், திரையரங்குகள்,விடுதிகள் என்பன சுகாதார துறையினரால் விடுக்கப்படும் அறிவித்தல்களுக்கு ஏற்பட செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நடமாட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் கூட கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் பாரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. குறிப்பாக மேல் மாகாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.

எனவே பொதுமக்கள் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற மறக்க வேண்டாம் என காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...