இந்த நாட்டில் நடக்கும் தவறுகளுக்கு மூல காரணம் நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையே – மங்கள சமரவீர

Date:

1978 ஆம் ஆண்டில் இலங்கையில் உருவாக்கப்பட்ட நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையே, அப்போதிலிருந்து தற்போதுவரை நாட்டில் இடம்பெற்றுவரும் பல்வேறு தீமைகளுக்கும் அடிப்படையாகும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சாடியிருக்கிறார்.

மேலும்  இது தொடர்பில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த 1978 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையே, அப்போதிலிருந்து தற்போதுவரை நாட்டில் இடம்பெற்றுவரும் பல்வேறு தீமைகளுக்கும் அடிப்படையாகும். சட்டத்தின் ஆட்சியை மையமாகக்கொண்டு செயற்படும் ஜனநாயக நாடாக இலங்கை இருக்க வேண்டுமானால், முதலில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும். அடுத்த ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், தான் தெரிவாகி 6 மாதகாலத்துக்குள் எந்தப் பதவிக்காகப் போட்டியிடுகின்றாரோ அந்தப் பதவியை ஒழிப்பதாக வாக்குறுதியளிக்க வேண்டும்.

மேலும் இது தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படாத பல விசேட நிபுணர்குழுவின் அறிக்கைகளின் ஊடாகவே நரகத்தை நோக்கிய இலங்கையின் பாதை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறைமையை ஒழிப்பதற்கு அரசியல் ரீதியான ஏற்புடைமையே அவசியமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...