இன்று அதிகாலை 4 மணி முதல் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது!

Date:

நாடு முழுவதும் அமுல் நடத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு இன்று (25) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

 

பயணக் கட்டுப்பாடுகள் மூலமான பெறுபேறுகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன நேற்று (24) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

 

மக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை அமுலிலிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

மேலும் நாள் தோறும் 2,000 மேற்பட்ட கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றார்கள். இதன் காரணமாக மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுவது அவசியம் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...