புகையிரத இன்ஜின் சாரதிகள் சங்கம் இன்று 30ஆம் திகதி காலை 8 மணி முதல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
புகையிரத பற்றுச்சீட்டுகளை மின்னணு முறையில் வழங்குவது தொடர்பான வேலைதிட்டத்தை வௌிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதிற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதிலும், உரிய பதில் கிடைக்காததால் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், புகையிரத பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.