இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்கான அனுமதிப்பத்திரத்தை இடை நிறுத்திய பஹ்ரைன்

Date:

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு புதிய வேலை வாய்ப்புக்களுக்கான அனுமதி பத்திரம் விநியோகிக்கும் செயற்பாட்டை பஹ்ரைன் அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

அந்நாட்டு மருத்துவ குழுவின் பகுப்பாய்வுகளின் அடிப்படையில் சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் அடங்குகின்றன.கடந்த மே மாதம் 24ஆம் திகதி முதல் குறித்த நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் வருவதற்கு பஹ்ரைன் தடை விதித்துள்ளது.

மேலும், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் நீடிக்க பஹ்ரைன் மருத்துவ குழு அண்மையில் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்.

20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறும் காலப்பகுதியில்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் 50 மி.மீ. இற்கும் அதிக மழைக்கு சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...