இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்கான அனுமதிப்பத்திரத்தை இடை நிறுத்திய பஹ்ரைன்

Date:

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளுக்கு புதிய வேலை வாய்ப்புக்களுக்கான அனுமதி பத்திரம் விநியோகிக்கும் செயற்பாட்டை பஹ்ரைன் அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

அந்நாட்டு மருத்துவ குழுவின் பகுப்பாய்வுகளின் அடிப்படையில் சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் அடங்குகின்றன.கடந்த மே மாதம் 24ஆம் திகதி முதல் குறித்த நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் வருவதற்கு பஹ்ரைன் தடை விதித்துள்ளது.

மேலும், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் நீடிக்க பஹ்ரைன் மருத்துவ குழு அண்மையில் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...