ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் சம்பியனான நியூசிலாந்து !

Date:

ஐசிசியினால் நடாத்தப்படும் முதலாவது உலகக்கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஸிப் தொடரில் இந்தியா அணியை வீழ்த்தி நியுசிலாந்து அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான குறித்த போட்டி இங்கிலாந்தின் சவுத்ஹெம்ப்டனில் இடம்பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி தனது முதல் இன்னிங்சில் 217 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்சில் 170 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது.

நியுசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 249 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

போட்டியில் தொடர்ச்சியாக மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டியை 6 ஆவது நாளாகவும் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதனை அடுத்து போட்டியின் இறுதி நாளான இன்று நியுசிலாந்து அணிக்கு 139 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி, தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...