ஊழியர்களை எவ்வாறு தொழிலுக்கு அழைப்பது பற்றி சுகாதார அமைச்சின் விளக்கம்!

Date:

அத்தியாவசிய சேவை மற்றும் அத்தியாவசியம் அல்லாத சேவைக்குள் அடங்கும் அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் பகுதிநிலை அரச நிறுவனங்கள், பணியாளர்களை சேவைக்கு அழைப்பதற்கான நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைக்குள் உள்ளடங்காத அரச நிறுவனங்களின் பணியாளர்கள் அதிகபட்சமாக வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் சேவைக்கு அழைக்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வீட்டில் இருந்து பணியாற்ற முடியாவிட்டால் மாத்திரமே அவர்களை இவ்வாறு சேவைக்கு அழைக்க முடியும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பொதுப் போக்குவரத்து சேவை ஒதுக்கப்பட்டுள்ளதால் சேவைக்கு அழைக்கப்படும் பணியாளர்களுக்கு சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக, வீட்டிலிருந்து அலுவலகத்திற்கான போக்குவரத்து வசதியை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் நிறுவனங்களும் குறைந்தப்பட்ச பணியாளர்களுடன் அலுவலகப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் முடிந்தளவில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் வீட்டில் இருந்து பணியாற்றுவதை ஊக்குவிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...