எம்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றியதால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு இன்று முதல் இழப்பீடுகள் வழங்கப்பட உள்ளது

Date:

9883 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜெயலத் தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டம்  நீர்கொழும்பு, பத்தலை , ஜா-எல மற்றும் கந்தானை உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

அதற்கமைய நீர்கொழும்பில் 6042 வத்தளையில் 1409 குடும்பங்களுக்கும் கந்தானையில் 233  குடும்பங்களுக்கும் சாலையைச்  சேர்ந்த 69 மீனவ குடும்பங்களுக்கு 5000 ரூபா நட்டஈடு வழங்கப்பட உள்ளது.

இழப்பீட்டுகாக 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார். பிரதேச செயலாளர்களும் மாவட்ட நிர்வாகிகளும் இணைந்து கப்பலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...