எம்.எஸ்.சி. மெசீனா கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் கடல் பிராந்தியத்திற்கு பாதிப்பு ஏற்படாது!

Date:

கிரிந்தை மஹா இராவணன் கலங்கரை விளக்கத்தில் இருந்து கிழக்கு திசையில் 480 கடல்மைல்களுக்கு அப்பால், எம்.எஸ்.சி.மெசீனா என்ற கொள்கலன் கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளமையால், நாட்டின் கடல் பிராந்தியத்திற்கு பாதிப்பு ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரான சட்டத்தரணி, தர்ஷனி லஹந்தபுர இதனைத் தெரிவித்துள்ளார்.

 

தீப்பற்றியுள்ள கப்பலுக்கு அண்மையில் பயணித்த வர்த்தக கப்பல் ஒன்று நேற்று, அதற்கு அருகில் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.

 

கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் கொழும்பு துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த இந்த கப்பல், சர்வதேச கடல் எல்லையில் தீப்பற்றியுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.

 

எனினும், அது இலங்கையின் மீட்பு வலயத்துடன் தொடர்புடையது என்பதனால், தற்போதைய கடல் வலயம் குறித்து, அனைத்து துறைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...