ஒழுக்க மீறல் குற்றச்சாட்டின் கீழ் குசல் மென்திஸ், நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலகவிற்கு எதிரான விசாரணைகள் அவர்களின் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர் முன்னெடுக்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் ஆரம்பிக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
நேற்று வந்த வீரர்கள் இன்னும் தனிமைப்படுத்தலில் உள்ளனர். வீரர்களுக்கு தமது பக்க நியாயத்தை கூற வாய்ப்பளிக்க வேண்டும். அதன் பின்னர் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மற்றும் கிரிக்கெட் சபையினால் அவர்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும்” என தெரிவித்தார்.