கம்மன்பிலவின் முடிவினால் அரசுக்குள் பதற்றம்!

Date:

எரிவாயு விலையை தீர்மானிப்பது தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் உறுப்பினர் பதவியை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இராஜினாமா செய்துள்ளார்.

 

எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பான தீர்மானமெடுக்கும் குழுவில் பங்கேற்றால் அரசுக்குள் இருக்கும் பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகவேண்டிவருமென கருதியே அவர் இந்த உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

 

அரசின் பொதுத் தீர்மானத்திற்கமைய எரிபொருள் விலைகளை அதிகரித்தாலும் அரசின் உறுப்பினர்களே அதனை விமர்சனம் செய்துள்ளதால் அதிருப்தியடைந்து இந்த முடிவை அமைச்சர் கம்மன்பில எடுத்துள்ளமை ஆளுங்கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ச அமைச்சராக நியமனம் பெறவுள்ளாரென செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் கம்மன்பில இந்த இராஜினாமாவை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...