கம்மன்பிலவின் முடிவினால் அரசுக்குள் பதற்றம்!

Date:

எரிவாயு விலையை தீர்மானிப்பது தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் உறுப்பினர் பதவியை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இராஜினாமா செய்துள்ளார்.

 

எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பான தீர்மானமெடுக்கும் குழுவில் பங்கேற்றால் அரசுக்குள் இருக்கும் பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகவேண்டிவருமென கருதியே அவர் இந்த உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

 

அரசின் பொதுத் தீர்மானத்திற்கமைய எரிபொருள் விலைகளை அதிகரித்தாலும் அரசின் உறுப்பினர்களே அதனை விமர்சனம் செய்துள்ளதால் அதிருப்தியடைந்து இந்த முடிவை அமைச்சர் கம்மன்பில எடுத்துள்ளமை ஆளுங்கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ச அமைச்சராக நியமனம் பெறவுள்ளாரென செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் கம்மன்பில இந்த இராஜினாமாவை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...