கைது செய்யப்பட்ட நகர சபை உறுப்பினர்கள் பிணையில் விடுதலை!

Date:

திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட கொலன்னாவை நகர சபை உறுப்பினர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று (16) பிற்பகல் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான மீதொட்டுமுல்ல பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் இருந்த இயந்திரம் ஒன்றை திருடியமை தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இயந்திரத்தை கொள்வனவு செய்த இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...