கொலைக் குற்றவாளியான துமிந்த சில்வாவின் விடுதலை குறித்து அரசை வன்மையாக கண்டித்த சுமன பிரேமச்சந்திர

Date:

கொலை குற்றவாளியான துமிந்த சில்வா ஜனாதிபதி பொது மன்னிப்பின் பிரகாரம் விடுவித்தமைக்காக அரசாங்கத்தின் முடிவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி வன்மையாக கண்டித்துள்ளார்.

கொலை குற்றத்துக்காக 2016 இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சில்வா, இன்ற ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பில் சுமன பிரேமச்சந்திர தெரிவிக்கையில், “கொலையாளி வெளியே. நீதியை மதிக்காத நாட்டின் மீது சூரியன் ஒரு போதும் பிரகாசிக்காது”

மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புகளை புறக்கணிப்பதன் மூலம், நீதித்துறையை மதிக்காத நாடாக இலங்கை மாறியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று இலங்கையில் அனுசரிக்கப்படும் சிறப்பு பெளத்த பண்டிகையான பொசொன் போயாவின் புனித நாளில் இந்த அநீதி ஏற்பட்டுள்ளது என்றும் சுமன பிரேமச்சந்திர சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...