கொலைக் குற்றவாளியான துமிந்த சில்வாவின் விடுதலை குறித்து அரசை வன்மையாக கண்டித்த சுமன பிரேமச்சந்திர

Date:

கொலை குற்றவாளியான துமிந்த சில்வா ஜனாதிபதி பொது மன்னிப்பின் பிரகாரம் விடுவித்தமைக்காக அரசாங்கத்தின் முடிவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி வன்மையாக கண்டித்துள்ளார்.

கொலை குற்றத்துக்காக 2016 இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சில்வா, இன்ற ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்பில் சுமன பிரேமச்சந்திர தெரிவிக்கையில், “கொலையாளி வெளியே. நீதியை மதிக்காத நாட்டின் மீது சூரியன் ஒரு போதும் பிரகாசிக்காது”

மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புகளை புறக்கணிப்பதன் மூலம், நீதித்துறையை மதிக்காத நாடாக இலங்கை மாறியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று இலங்கையில் அனுசரிக்கப்படும் சிறப்பு பெளத்த பண்டிகையான பொசொன் போயாவின் புனித நாளில் இந்த அநீதி ஏற்பட்டுள்ளது என்றும் சுமன பிரேமச்சந்திர சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...