கொலைக் குற்றவாளி துமிந்தவின் விடுதலை நாட்டின் ஆட்சியை கேள்விக்குறியாக்கியுள்ளது -இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதிருப்தி!

Date:

கொலைக்குற்றத்திற்கு உள்ளாகி மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. துமிந்த சில்வா தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரெப்லிட்ஸ் அம்மையார், ட்விட்டரில் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பயங்கரவாத தடைச்சட்டக் கைதிகளின் முன்கூட்டிய விடுதலையை நாங்கள் வரவேற்கிறோம், எனினும் 2018 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்றம் உறுதிசெய்த தீர்ப்புக்கெதிராக, இப்போது துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான சம அணுகல் என்பது ஐ.நா. நிலைபேறான அபிவிருத்தி கோட்பாடுகளுக்கு அடிப்படையானவையாகும். இவற்றை இலங்கையும் ஏற்றுள்ளது என்றும் அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...