சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது!

Date:

கிண்ணியா பொலிஸ் பிரிவின் மணலாறு மற்றும் கண்டல் காடு ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

4 உழவு இயந்திரங்கள் மற்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றில் இவர்கள் சட்டவிரோதமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்த போது பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரங்கள் மற்றும் டிப்பர் ரக வாகனத்தையும் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் பாரப்படுத்த கிண்ணியா பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின்...

முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்ய உத்தரவு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித...

ரயில்வே பொது மேலாளரை பதவி நீக்க அமைச்சரவை அனுமதி

ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தரவை அந்தப் பதவியில் இருந்து நீக்க...