மேலும் மூன்று டெல்டா வைரஸ் தொற்றளர்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் கட்டிட நிர்மாணம் ஒன்று இடம்பெற்றுவரும் பகுதியிலிருந்து இந்தத் தொற்றளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கஹத்துடுவ பகுதியில் டெல்டா வைரசுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக அந்தப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தார். குறித்த நபர் கொழும்பு கொம்பனித்தெரு பகுதியில் உள்ள கட்டிட ஒன்றில் நிர்மாணப் பணி புரிந்ததாகவும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டிருந்தார்.
கொழும்பில் மற்றும் பொருளாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் கூறியுள்ளார். இலங்கையில் முதல் தடவையாக தெமட்டகொடை பகுதியில் சமூகத்துக்குள் இருந்து ஐந்து கொரோனா தொற்றளர்கள் அண்மையில் இனம் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.