தந்தையர் தினத்தன்று உசேன் போல்ட் தம்பதியரின் இன்ஸ்டாகிராம் பதிவு

Date:

ஒலிம்பிக் வரலாற்றில் அதிசிறந்த குறுந்தூர ஓட்ட வீரரரும் உலக சாதனை நாயகனுமான உஸைன் போல்ட் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தந்தையானார்.

தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை உஸைன்போல்ட்டும் அவரது மனைவி கெசி பெனெட்டும் அறிவித்துள்ளனர்.

தந்தையர் தினமான ஞாயிறன்று இந்தத் தகவலை குழந்தைகளுடனான குடும்பப் படத்துடன் தனது குடுவிட்டர் பக்கத்தில் உஸைன் போல்ட் பதிவிட்டிருந்தார்.

தங்களது இரட்டைக் குழந்தைகளுக்கு தண்டர் போல்ட் மற்றும் சென். லியோ போல்ட் என பெயரிட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

உஸைன் போல்டுக்கும் கெசி பெனட்டுக்கும் கடந்த வருடம் மே மாதம் பிறந்த பெண் குழந்தைக்கு ஒரு மாதம் கழித்து ஒலிம்பியா லைட்னிங் என பெயர் சூட்டினர்.

2008, 2012, 2016 ஆகிய மூன்று ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் பங்குபற்றிய உஸைன் போல்ட் மொத்தமாக 8 தங்கப் பதக்கங்களை சுவீகரித்துள்ளார்.

உலகின் அதி வேக மனிதன் என புகழப்படும் போல்ட், ஆண்களுக்கான 100 மீற்றர் (9.58 செக்), 200 மீற்றர் (19.19 செக்) ஆகிய ஓட்டப் போட்டிகளில் உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். இவர் 2009 ஆண்டு பேர்லினில் இந்த இரண்டு உலக சாதனைகளையும் 4 நாள் இடைவெளியில் நிலைநாட்டியிருந்தார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...