தந்தையர் தினத்தன்று உசேன் போல்ட் தம்பதியரின் இன்ஸ்டாகிராம் பதிவு

Date:

ஒலிம்பிக் வரலாற்றில் அதிசிறந்த குறுந்தூர ஓட்ட வீரரரும் உலக சாதனை நாயகனுமான உஸைன் போல்ட் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தந்தையானார்.

தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததை உஸைன்போல்ட்டும் அவரது மனைவி கெசி பெனெட்டும் அறிவித்துள்ளனர்.

தந்தையர் தினமான ஞாயிறன்று இந்தத் தகவலை குழந்தைகளுடனான குடும்பப் படத்துடன் தனது குடுவிட்டர் பக்கத்தில் உஸைன் போல்ட் பதிவிட்டிருந்தார்.

தங்களது இரட்டைக் குழந்தைகளுக்கு தண்டர் போல்ட் மற்றும் சென். லியோ போல்ட் என பெயரிட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

உஸைன் போல்டுக்கும் கெசி பெனட்டுக்கும் கடந்த வருடம் மே மாதம் பிறந்த பெண் குழந்தைக்கு ஒரு மாதம் கழித்து ஒலிம்பியா லைட்னிங் என பெயர் சூட்டினர்.

2008, 2012, 2016 ஆகிய மூன்று ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் பங்குபற்றிய உஸைன் போல்ட் மொத்தமாக 8 தங்கப் பதக்கங்களை சுவீகரித்துள்ளார்.

உலகின் அதி வேக மனிதன் என புகழப்படும் போல்ட், ஆண்களுக்கான 100 மீற்றர் (9.58 செக்), 200 மீற்றர் (19.19 செக்) ஆகிய ஓட்டப் போட்டிகளில் உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். இவர் 2009 ஆண்டு பேர்லினில் இந்த இரண்டு உலக சாதனைகளையும் 4 நாள் இடைவெளியில் நிலைநாட்டியிருந்தார்.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...