தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு பிற்போடல்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நாளைய தினம் இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில், நாளை மாலை 4 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவிருந்தது.

புதிய அரசியலமைப்பு விவகாரம் குறித்து இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எமது செய்திச் சேவைக்கு இன்று பிற்பகல் தெரிவித்திருந்தார்.

எவ்வாறிருப்பினும், நாளைய தினம் நடைபெற இருந்த கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தங்களுக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய சந்திப்புக்கான திகதியும், நேரமும் பின்னர் அறிவிக்கப்படுமென்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...