தேசிய பட்டியலில் 50 சதவீதத்தை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் – அரசியல் கட்சிகள் கோரிக்கை!

Date:

நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமையில் மாற்றம் மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு, அடுத்த மாதம் முதல் பொதுமக்களின் கருத்துக்களைக் கோர எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 12 இயக்கத்துடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில், குறித்த தெரிவுக்குழுவின் தலைவரான அமைச்சர் தினேஸ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இணையவழி ஊடாக இடம்பெற்ற இந்த கலந்தரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய 40 பேர் பங்கேற்றனர்.

தேர்தல் முறைமையில் மாற்றம் மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு, எதிர்வரும் 6 மாதங்களில், சமூகத்திலுள்ள அனைத்து தரப்பினர்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் கருத்துக்களையும், யோசனைகளையும் பெறவுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேநேரம், நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 30 முதல் 70 சதவீதத்திற்கு இடைப்பட்ட அளவில் உறுதிப்படுத்துவதற்கான யோசனை ஒன்றும் முன்வைக்கப்படவுள்ளது.

நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தால், தேர்தல் முறைமையில் மாற்றம் மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு கடிதம் மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அனைத்து அரசியல் கட்சிகளாலும் தேசிய பட்டியலில் 50 சதவீதத்தை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...