நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1038 பேர் கைது

Date:

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 1038 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் அதிகமானோர் குலியாப்பிட்டிய, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என போலீஸ் ஊடக பேச்சாளர் பிரதி போலீஸ் அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 29,015 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்க கூடிய 14 இடங்களில் நேற்றைய தினம் 3,111 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றில் அநாவசியமாக பயணித்த 104 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக போலீஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தலாவ பகுதியில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: 06 பேர் உயிரிழப்பு!

அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து...

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரை: இலங்கை- சவூதி அரேபியா ஒப்பந்தம் கைச்சாத்து.

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் ஒப்பந்தம் இலங்கை சவூதி அரேபியாவிற்கிடையில் கைசாத்திடப்பட்டது. நேற்று...

குர்ஆனின் மொழியில் அறிவியல் பேசிய குரல் மறைந்தது!

முஹம்மத் பகீஹுத்தீன் பேரறிஞர் டாக்டர் ஸக்லூல் ராகிப் முஹம்மத் அல் நஜ்ஜார் (1933...

க.பொ.த உயர்தரப் பரீட்சையையொட்டி விசேட போக்குவரத்து சேவைகள்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையையொட்டி  விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பரீட்சைக்காலங்களில் மாணவர்கள் மற்றும்...