இன்று நாட்டில் மேலும் 2,735 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளத தெரிவிக்கப்படுகிறது.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 198,579ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நாட்டில் இதுவரையில் 164,281பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
அதேபோல் நாட்டில் கொரோனா தொற்றால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 1,608 ஆக காணப்படுகிறது.