நாளை 20,000 பொலிசார் கடமையில்!

Date:

பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் நாளை முதல் நடைமுறைக்கு வருவதால் பொசன் போயா தினத்தில் 20,000 பொலிசார் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

நாளைய தினம் வீடுகளில் தங்கி இருந்து மத வழிபாடுகளை அனுஷ்டிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

வாடிக்கையாளர் இடங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைகள் போன்ற பொது இடங்களில், மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுகின்றவர்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக சிவில் உடையில் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...