பதவி விலக வேண்டியது நானா? அல்லது சாகர காரியவசமா?-கம்மன்பில கேள்வி!

Date:

அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் ஒன்றை பிரகடனப்படுத்தியதையே தான் மேற்கொண்டதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எரிபொருள் விலையை அதிகரிக்க மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் தன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமளிக்க அமைச்சர் இன்று விசேட ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்திருந்த கருத்துக்கு பதில் அளித்து அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

சாகர காரியவசம் தாக்குவது தன்னை அல்ல எனவும், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உருவாக்கிய முதலாவது ஜனாதிபதிக்கும் மற்றும் பிரதமரின் தலைப்புடன் கூடிய கடிதத்தை பயன்படுத்தி பிரதமருக்குமாகும் என அவர் இதன் போது தெரிவித்தார்.

அதன்படி, பதவி விலக வேண்டியது நானா அல்லது சாகர காரியவசமா என்று இந்நாட்டு அறிவார்ந்த மக்கள் தீர்மானிப்பார்கள் என அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...