நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 14ம் திகதி அதிகாலை 4 மணிக்கு பின்னர் நீடிக்கப்படுவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லை இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், நாடு முழுவதும் தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.