பயணக் கட்டுப்பாடு மேலும் நீடிப்பா? அமைச்சரவை பேச்சாளர் வெளியிட்ட தகவல்!

Date:

இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 14 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார். இதன்போது மேலும் பதில் வழங்கிய அவர்,

பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டால், மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும்.

ஏற்படும் நிலைமைகளுக்கு அமையவே தீர்மானங்கள் எடுக்கப்படும். ஆனாலும் எதிர்காலத்தில் எடுக்கப்படும் தீர்மானம் குறித்து தற்போது சரியாக கூற முடியாது என்றார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...