பேருவளை “மருதானை செரிடி” அமைப்பினால் உள்ளக கிராமங்களின் புள்ளிவிவரங்கள் சேகரிக்கும் நடவடிக்கை!

Date:

அண்மையில் பேருவளை Maradana Charity “மருதானை செரிடி” அமைப்பு பேருவளையில் உள்ள பல கிராமங்களின் புள்ளிவிபர தரவுகள் சேகரிக்கும் பணியினை மேற்கொண்டிருந்தது.
மருதானை, அரப் வீதி, ஹெட்டியாகந்தை, ஹேனவத்தை, கபடாகொட, வத்ஹிமிராஜபுர, கொரகாதுவ, கொடவத்தமலை, மாளிகாஹேனை, பண்டாரவத்தை, ஷேக் அப்துல் முஹீஸ் மாவத்தை போன்ற கிராமங்களின் தரவுகளே சேகரிக்கப்பட்டது.

கிராமங்களிலுள்ள சனத்தொகை, முதியோர் எண்ணிக்கை, சிறுவர்களின் எண்ணிக்கை, மாணவர் எண்ணிக்கை, வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை, விதவைகள் மற்றும் அனாதைகளின் எண்ணிக்கை என பல்வேறு முக்கியமான தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

இப்பணியில் ஊடகவியலாளர் ரூமி ஹாரிஸ் தலைமையில் பல்கலைக்கழக மாணவர்கள், தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், உயர்கல்வி மாணவர்கள், உயர்தர மாணவர்கள் என பல்வேறுபட்ட மாணவர் குழுக்கள் கலந்து கொண்டனர்.

இந்த தகவல் திரட்டல் மூலம் Maradana Charity அமைப்பின் எதிர்கால செயல்திட்டங்களை இலகுவான முறையில் மேற்கொள்ளுவதற்கு உதவியாக அமையுமென Maradana Charity அமைப்பின் பொதுச்செயலாளர் ரூமி ஹாரிஸ் தெரிவித்தார்.

இந்தப் புள்ளி விபரங்கள் அடங்கிய Mobile App விரைவில் வெளியிடப்படவுள்ளது.
இந்த Mobile App இனை Maradana Charity உறுப்பினரும், இளம் தொழில்நுட்பவியலாளருமான சஹ்மி அஹமட் உருவாக்கிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

கணினி அமைப்பு கோளாறு காரணமாக இன்று (24) பதிவாளர் நாயகம் அலுவலக...

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...