பொதுப் போக்குவரத்து எண்ணிக்கையில் அதிகரிப்பு

Date:

நாட்டில் மாகாணங்களுக்குள் சேவையில் ஈடுபடும் பஸ் மற்றும் புகையிரத சேவைகளின் எண்ணிக்கை இன்று முதல் அதிகரிப்படவுள்ளனஇதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் புகையிரத சேவைகளுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் செயலணி இதுவரை அனுமதி வழங்கவில்லை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு காலையில் சென்றடையக்கூடிய புகையிரதங்களை சேவையில் ஈடுபடுவதற்கும், மாலையில் கொழும்பு கோட்டை மற்றும் மருதானை நிலையங்களுக்கு சென்றடையக்கூடிய ரயில்களை சேவையில் ஈடுபடுவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் இன்று முதல் 70 புகையிரத சேவைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் புகையிரதங்களை பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தவிர்ப்பதற்காக சமூக இடைவெளியை பேணும் வகையில் பயணிகளுக்கு உதவுவது இதன் நோக்கமாகும்.

இந்நிலையில், அம்பேபுஸ்ஸ, மீரிகம, வேயங்கொட ஆகிய இடங்களில் இருந்தும், கம்பஹாவில் இருந்து கொழும்பு கோட்டைக்கும் 11 புகையிரத சேலைகள் இன்று இடம்பெறும்.

கரையோர புகையிரத பாதையில் அலுத்கம, களுத்துறை தெற்கு, வாத்துவ, பாணந்துறை, மொரட்டுவ, கல்கிஸ்சை ஆகிய இடங்களிலிருந்து 12 ரயில் சேவைகள் இடம்பெறும்.

இதேபோன்று, அவிசாவளை- பாதுக்கைக்கும் இடையில் 5 புகையிரத சேவைகள் இடம்பெறும்.

புத்தளம் புகையிரத பாதையில் கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்புக்கும் இடையில் 8 புகையிரத சேவைகள் இடம்பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...