போதிய வெளிச்சமின்மையால் இடை நிறுத்தப்பட்ட இந்தியா – நியூஸிலாந்து டெஸ்ட் போட்டி!

Date:

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி, போதிய வெளிச்சமின்மையால் நேற்று இடையிடையே பாதிக்கப்பட்டது.

 

போட்டியில், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில், 3 விக்கட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

 

விராட் கோலி 44 ஓட்டங்களுடனும், அஜின்கிஹா ரஹானே 29 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.சீரற்ற வானிலையால் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்டது.

 

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தின்போதும் போதிய வெளிச்சமின்மை காரணமாக மூன்று சந்தர்ப்பங்களில் போட்டி இடைநிறுத்தப்பட்டது.இன்று மூன்றாம் நாள் ஆட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...

அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய...

பல மாகாணங்களில் அதிக வெப்பம்!

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் மனித உடலுக்கு உணரப்படும்...

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் அறிமுக விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...