மட்டக்களப்பில் 79,580 குடும்பங்களுக்கு ரூ.5,000 கொடுப்பனவு வழங்கி வைப்பு!

Date:

நாடு பூராகவும் கொவிட் சூழ்நிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசினால் 5000/= நிதி கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களுக்குள் மாத்திரம் பாதிப்புக்குள்ளான 79,580 குடும்பங்களுக்கு இக் கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி உதவி பெற்று வருகின்ற சுமார் 78,584 குடும்பங்களுக்கும், முதியோர் கொடுப்பனவை பெற்று வருகின்ற 996 குடும்பங்கள் உட்பட மொத்தமாக 79,580 குடும்பங்களுக்கு கடந்த மூன்று தினங்களுக்குள் மாத்திரம் குறித்த கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை குறித்த கொடுப்பனவு கிடைக்கப்பெறாத குடும்பங்களுக்கு தொடர்ச்சியாக வழங்கி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு குறித்த கொடுப்பனவானது பிரதேச செயலாளர்களின் வழிகாட்டுதலின் படி உரிய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் யுத்த நிறுத்த மீறல்கள்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கொலை!

காசா நகரின் ஸைத்தூன் பகுதியில் உள்ள தங்களது வீட்டை புனரமைக்கும் முயற்சியில்...

செவ்வந்தியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

நேபாளத்தில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல...

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி இன்னும் ஆரம்பக்கட்ட பரிசோதனை நிலையிலேயே உள்ளது: சுகாதார அமைச்சு

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி 'என்டோரோமிக்ஸ்' (Enteromix) தொடர்பான பரபரப்பான கூற்றுகளுக்கு எதிராக...

மார்பக புற்று நோயால் ஒரு நாளைக்கு மூவர் உயிரிழப்பு!

இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் அதிகப்படியான பெண்கள் மார்பகப் புற்று நோயினால்...