மட்டக்களப்பில் 79,580 குடும்பங்களுக்கு ரூ.5,000 கொடுப்பனவு வழங்கி வைப்பு!

Date:

நாடு பூராகவும் கொவிட் சூழ்நிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசினால் 5000/= நிதி கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களுக்குள் மாத்திரம் பாதிப்புக்குள்ளான 79,580 குடும்பங்களுக்கு இக் கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி உதவி பெற்று வருகின்ற சுமார் 78,584 குடும்பங்களுக்கும், முதியோர் கொடுப்பனவை பெற்று வருகின்ற 996 குடும்பங்கள் உட்பட மொத்தமாக 79,580 குடும்பங்களுக்கு கடந்த மூன்று தினங்களுக்குள் மாத்திரம் குறித்த கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை குறித்த கொடுப்பனவு கிடைக்கப்பெறாத குடும்பங்களுக்கு தொடர்ச்சியாக வழங்கி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு குறித்த கொடுப்பனவானது பிரதேச செயலாளர்களின் வழிகாட்டுதலின் படி உரிய பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...

சலாம் ரமழான் 2026: கொழும்பு கிரீன் பாத்தில் தொடங்கிய கலாசார விழா!

இலங்கையின்  முஸ்லிம் கலாசாரத் திருவிழாவான ‘சலாம் ரமழான் 2026’, மேல் மாகாண...

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...