மற்றுமொரு தடுப்பூசிக்கு அனுமதி கோரல்!

Date:

பாரத் பயோன்டெக் நிறுவன தயாரிப்பான கோவெக்சின் தடுப்பூசி 77.8 சதவீத செயல்திறன் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

தனது மூன்றாவது கட்ட பரிசோதனை அறிக்கையை மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அந்நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.

 

எனினும் கோவெக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் இன்னும் அங்கீகாரம் அளிக்கவில்லை.

 

அவசரகால பயன்பாட்டிற்கு அங்கீகாரமளிக்க வேண்டும் என பாரத் பயோன்டெக் நிறுவனம் தங்களது 90 சதவீத ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது.

 

இந்நிலையில் ஒப்புதலுக்கு முந்தைய இறுதி ஆவணங்களை சமர்ப்பிக்கும் கூட்டம் நாளைய தினம் நடைபெறவுள்ளது.

 

இதனால் விரைவில் கோவெக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...