மஹர, வெலிகடை சிறைச்சாலை கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நிறைவு!

Date:

வெலிகடை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறைக் கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

சிறைச்சாலை ஊடக பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமமான சந்தன ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

 

மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மஹர மற்றும் வெலிகடை சிறைச்சாலைகளின் கைதிகள் சிலர் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 

இந்நிலையில், சிறைச்சாலை இராஜாங்க அமைச்சின் செயலாளர் கைதிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலை தொடர்ந்து தமது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட கைதிகள் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...

பலஸ்தீனத்திற்கான உலக ஒற்றுமை பேரணி கொழும்பில்: ஆசிய நாடுகள் இணையும் மனிதாபிமானப் போராட்டம்!

கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விஹார...

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின்...

முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைது செய்ய உத்தரவு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித...