முன்னாள் போராளிகள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பொருளாளர் கைது!

Date:

விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட முன்னாள் போராளிகள் ஜனநாய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பொருளாளரான முன்னாள் போராளி ஒருவரை இன்று (01) பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

 

மாவட்ட புலனாய்வு பிரிவினரின் இரகசிய தகவலை அடுத்து களுவாங்சிக்குடி பொலிசார் சம்பவ தினமான இன்று முன்னாள் போராளியான முன்னாள் போராளிகள் ஜனநாயகட்சியின் பொருளாளராக செயற்பட்டு வந்த நாகலிங்கம் பிரதீபன் என்பவரை மட்பாண்ட வீதி போரதீவு பிரதேசத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

 

குறித்த நபரை தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகத்தில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக தெரிவித்த பொலிசார் இதில் கைது செய்யப்பட்டவரை நாளை (02) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

Popular

More like this
Related

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...

மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து நாளை (21) முதல் விசேட...

ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க கடற்படை: பதிலடியை தொடங்கிய ஈரான்!

தனது கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, வளைகுடாவில் ஈரான் கொடி ஏற்றப்பட்ட...

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்-சஜித் சந்திப்பு.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...