மெல்போர்ன் நகரம்  நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளது!

Date:

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்ன், கோவிட் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டு, நாளை(10) மீண்டும்  திறக்கப்பட உள்ளது.

இருப்பினும், பல்வேறு பயண கட்டுப்பாடுகளுக்கு உட்பட,அதிகாரிகள் மெல்போர்னை நாளை நள்ளிரவு 12 முதல் மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளனர்.

சுமார் 5 மில்லியன் மக்களை பாதித்த கோவிட் -19 வைரஸ் பரவும் அபாயத்தால் மெல்போர்ன் நகரம் கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 30,200 கோவிட் -19 நோய்த்தொற்றுகள் மற்றும் 910 இறப்புகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...