வீடொன்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட இளம் தம்பதி

Date:

நேற்று (06) பிற்பகல் வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்லபாவ பகுதியில் உள்ள வீடொன்றில் உயிரிழந்த நிலையில் இளம் தம்பதியின் சடலங்கள்  மீட்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்த 36 வயது ஆண் மற்றும் ஹெட்டிபொல பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளம் யுவதி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.அவர்கள் இருவரும் வெல்லவாய பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Popular

More like this
Related

வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு...

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் QR

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR முறைமை மீள நடைமுறைக்கு வருமென...

நிலக்கரி இறக்குமதியும் ஊழல் புகார்களும்: சீமெந்துத் தொழிற்சாலை முதல் அனல்மின் நிலையம் வரை புத்தளத்தின் தொடர் போராட்டங்கள்.

மின்சாரம் - எரிசக்தி அமைச்சரினதும் அமைச்சின் செயலாளரினதும் இராஜினாமாவைத் தொடர்ந்து  நமது...

ஏப்ரல் 20 முதல் நாட்டின் பல பகுதிகளிலும் மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை மறுதினம் முதல் (20) மாலை வேளையில்...