21ஆம் திகதிக்கு பின்னர் பயணக்கட்டுப்பாட்டினை நீக்கி நாட்டை திறப்பது குறித்து 19 அல்லது 20 ஆம் திகதிகளில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என, அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (15) இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலமைகளை அவதானித்து அது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என, அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.