X-Press Pearl கப்பலின் பிளாஸ்ரிக் பொருட்கள் மன்னார் கடற்கரைப் பகுதிகளில்

Date:

கொழும்புப் பகுதியில் தீப்பற்றி எரிந்து கடலில் மூழ்கிய கப்பலின் கழிவு பொருட்கள் மன்னார் கடற்கரைப் பகுதிகளில் கரை ஒதுங்குகின்றன.

கடந்த வாரம் இலங்கையின் கொழும்பு கடற்பரப்பில் தீபற்றிய நிலையில் மூழ்கடிக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான கழிவு பொருட்கள் என்று சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் இன்று(10) காலை மன்னார் வங்காலை கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ளதாக வங்காலை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும் மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்கள் மீன்பிடி திணைக்களத்தினர் கடற்படையினர் அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்து கடலில் கரை ஒதுங்கிய பொருட்களை சேகரித்து சென்றுள்ளனர்

வங்காலை பொலிஸ் நிலைத்திற்கு அருகில் உள்ள கடற்பரப்பிலேயே மேற்படி சிறிய பிளாஸ்ரிக் உருண்டைகள் மற்றும் எரிந்த நிலையில் காணப்பட்ட சிறிய பிளாஸ்டிக் துண்டுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறிய உருண்டைகள் கடல் கரையேரங்கள் முழுவதிலும் சிதறி கிடப்பதை அவதானிக்க கூடியதா உள்ளதுடன் தற்போது காற்று காலம் என்ற படியினால் மேலும் அதிகமான பொருட்கள் மன்னார் கடல் பகுதிகளை வந்தடைய கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Popular

More like this
Related

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று...

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...