அதிகமான விபத்து மரணங்கள் நேற்று பதிவு !

Date:

பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்த போதும் நேற்றைய தினத்தில் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபரருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் இதுவரையான பயணத் தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் வாகன விபத்துக்களில் அதிகமானவர்கள் உயிரிழந்த சந்தர்ப்பம் இதுவென அவர் சுட்டிக்காட்டினார்.

இவர்களில் 5 பேர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தவர்கள் எனவும் நான்கு பேர் அதிக வேகம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சாதாரணமாக பயணத் தடை விதிக்கப்படாத நாட்களில் கூட நாளொன்றுக்கு 8 அல்லது 9 பேரே விபத்துகளில் உயிரிழப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து நாளை (21) முதல் விசேட...

ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க கடற்படை: பதிலடியை தொடங்கிய ஈரான்!

தனது கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, வளைகுடாவில் ஈரான் கொடி ஏற்றப்பட்ட...

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்-சஜித் சந்திப்பு.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

இன்று முதல் ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் வழமைக்கு

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆட்பதிவுத் திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டை விநியோக ஒருநாள்...