இந்த நாட்டில் நடக்கும் தவறுகளுக்கு மூல காரணம் நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையே – மங்கள சமரவீர

Date:

1978 ஆம் ஆண்டில் இலங்கையில் உருவாக்கப்பட்ட நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையே, அப்போதிலிருந்து தற்போதுவரை நாட்டில் இடம்பெற்றுவரும் பல்வேறு தீமைகளுக்கும் அடிப்படையாகும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சாடியிருக்கிறார்.

மேலும்  இது தொடர்பில் அவர் கூறியிருப்பதாவது, கடந்த 1978 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட நிறைவேற்றதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையே, அப்போதிலிருந்து தற்போதுவரை நாட்டில் இடம்பெற்றுவரும் பல்வேறு தீமைகளுக்கும் அடிப்படையாகும். சட்டத்தின் ஆட்சியை மையமாகக்கொண்டு செயற்படும் ஜனநாயக நாடாக இலங்கை இருக்க வேண்டுமானால், முதலில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும். அடுத்த ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், தான் தெரிவாகி 6 மாதகாலத்துக்குள் எந்தப் பதவிக்காகப் போட்டியிடுகின்றாரோ அந்தப் பதவியை ஒழிப்பதாக வாக்குறுதியளிக்க வேண்டும்.

மேலும் இது தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படாத பல விசேட நிபுணர்குழுவின் அறிக்கைகளின் ஊடாகவே நரகத்தை நோக்கிய இலங்கையின் பாதை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நிறைவேற்றதிகார ஜனாதிபதிமுறைமையை ஒழிப்பதற்கு அரசியல் ரீதியான ஏற்புடைமையே அவசியமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...