உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றாடல் அமைச்சு விடுத்துள்ள செய்தி!

Date:

சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே, இலங்கை இம்முறை உலக சுற்றுச்சூழல் தினத்தை எதிர்கொள்கிறது.

இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அனைத்து வீடுகளையும், வீட்டுத் தோட்டங்களையும், நுளம்புகளற்ற இடமாக வைத்திருக்க இன்றும், நாளையும், நடவடிக்கை எடுக்குமாறு சுற்றாடல் அமைச்சு பொதுமக்களைக் கோரியுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு 48 மணித்தியாலம் என்ற தொனிப்பொருளில், இந்த வேலைத்திட்டம் நடைமுறையாகிறது.

கொரோனா பரவல் நிலைக்கு மத்தியில் தற்போதைய காலநிலையுடன், எதிர்காலத்தில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரிக்கும் நிலைமை உள்ளது.

எனவே இதனை கருத்திற் கொண்டு பொதுமக்கள் தத்தமது சுற்றுச்சூழலை தூய்மையாக பேணுமாறு சுற்றாடல் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...