எம்மால் இந்த நாட்டை காப்பாற்ற முடியும்!-பவித்ரா நம்பிக்கை!

Date:

கொவிட் கட்டுப்பாட்டிற்காக விதிக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுக் கொடுக்க ஆலோசனை வழங்கியதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

களுத்துறை வைத்தியசாலையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இவ்வாறு கடுமையான தண்டனைகளை பெற்றுக் கொடுக்காவிடின் நாட்டை காப்பாற்றுவது கடினம் என அமைச்சர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பொலிஸ் மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து இது தொடர்பில் சட்டத்தை கடுமையாக செயற்படுத்தவுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்தார்.

முதலாவது மற்றும் இரண்டாவது கொவிட் அலையினை கட்டுப்படுத்தியது போல மூன்றாவது கொவிட் அலையையும் கட்டுப்படுத்துவது கடினமான பணி அல்ல என தெரிவித்த அமைச்சர் எம்மால் நாட்டை காப்பாற்ற முடியும் என தெரிவித்தார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...