திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சீமேந்து ஏற்றிச்சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று(28) கந்தளாய் 92 ஆம் கட்டைப் சந்தியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
52 வயதுடைய சாரதி ஒருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலையிலிருந்து குருணாகலைக்குச் சென்ற லொறியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை தூக்கத்தினாலே இவ்விபத்து நிகழ்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எப்.முபாரக்