கர்ப்பிணிகளுக்கான கொவிட் தடுப்பூசி செலுத்துகை வினைத்திறனற்றது – மகப்பேற்று வைத்தியர்கள் சங்கம் தெரிவிப்பு!

Date:

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் செயற்பாடு வினைத்திறனற்று இடம்பெறுவதாக மகப்பேற்று மற்றும் மகளிர் நோயியல் விசேட வைத்தியர்களின் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

 

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, கொவிட்-19 தடுப்பூசி வழங்குவதற்கு அண்மையில் தீர்மானிக்கப்பட்டது.

 

இதன்போது பல்வேறு நோய் நிலைமைகள் தொடர்பில் அதிக ஆபத்துள்ளவர்களாக அடையாளம் காணப்படும் கர்ப்பிணிகளுக்கு முன்னுரிமையளித்து தடுப்பூசி வழங்க முடிவெடுக்கப்பட்டது.

 

இதற்கமைய கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள், கடந்த 9 ஆம் திகதி முதற்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டன.

 

தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்களில், அவதானம் மிக்க நிலையில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுவதாக குடும்பநல சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ள மகப்பேற்று மற்றும் மகளிர் நோயியல் விசேட வைத்தியர்களின் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரதீப் டி சில்வா, குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

 

இந்த மாதம் நிறைவடையும்போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைக்கு அமைய, தகைமைபெறும் அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதை ஆரம்பித்திருக்க வேண்டும்.

 

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதியாகும்போது, தகைமையுடைய அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், இரண்டு கொவிட்-19 தடுப்பூசிகளையும் வழங்கி நிறைவுசெய்ய வேண்டும்.

 

இதனை செயற்படுத்த முடியாவிட்டால், தாங்கள் செயற்படுத்தித் தருவதாக மகப்பேற்று மற்றும் மகளிர் நோயியல் விசேட வைத்தியர்களின் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரதீப் டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...