கொவிட் -19 பரவலை தடுக்க தன்னார்வப் படையணி ஒன்றை அமைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போதைய கொவிட் தடுப்பு பணிகளில் நேரடியாக ஈடுபடாத சுகாதார ஊழியர்களை குறித்த பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தும் நோக்கத்துடன் தன்னார்வப் படையணி ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து இதற்காக பதிவு செய்துக் கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கொவிட் தடுப்பு பணிக்காக பங்களிப்பு செய்ய ஏராளமான மக்கள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.