சிறுவர்கள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

Date:

தற்போதைய பயணத் தடையை அடுத்து சிறுவர்களை வீடுகளுக்கு உள்ளேயே தங்க வைப்பது சிறந்தது எனவும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு வரும் வாகனங்களுக்கு அருகில் அவர்களை அழைத்து செல்ல வேண்டாம் எனவும் பொரளை ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் டொக்டர் தீபால் பெரேரா, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மரக்கறி, பழ வகைகள், உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வாகனங்கள் வீட்டிற்கு அருகில் வருகை தரும் போது, அந்த வாகனங்களுக்கு அருகில் சிறுவர்கள் செல்வது வழக்கம் என அவர் குறிப்பிட்டார்.

 

இவ்வாறு வருகை தரும் வாகனங்களுக்கு அருகில், சிறுவர்கள் செல்வதற்கு இடமளிக்க வேண்டாம் என கூறிய அவர், குறித்த வாகனங்களுக்கு அருகில் வீட்டிலுள்ள பெரியவர்களை மாத்திரம் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

 

பொருட்களை கொள்வனவு செய்ததன் பின்னர், உடனடியாக வீட்டிற்குள் அவற்றை கொண்டு செல்ல வேண்டாம் எனவும், வீட்டிற்கு வெளியிலேயே வைத்து, அவற்றை கழுவி வீட்டிற்குள் கொண்டு செல்லுமாறும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

 

இதேவேளை, 2 வயது முதல் 15 வயது வரையான அனைத்து சிறுவர்களுக்கும் கட்டாயம் முகக் கவசத்தை அணிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Popular

More like this
Related

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...