சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதை நிறுத்துங்கள்-சிரேஷ்ட பேராசிரியர் வேண்டுகோள்!

Date:

வேகமாக பரவும் கொவிட் வைரஸ் இனங்காணப்பட்ட நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதை நிறுத்துமாறு சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன த சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று “BIG FOCUS” நிகழ்ச்சில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

14 நாட்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் நேற்று (01) முதல் சுற்றுலா பயணிகளுக்காக திறந்து விடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தென் ஆபிரிக்காவில் மிக வேகமாக பரவக்கூடிய வைரஸ் வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தென் ஆபிரிக்காவில் இருந்து இலங்கை வருவதற்கு எந்த தடையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலமையில் இந்த செயற்பாடு மிகவும் ஆபத்தானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...