“நிபுணர் குழுக்கள் கூறினால் மட்டுமே 14 ஆம் திகதி நாடு திறக்கப்படும்”

Date:

கோவிட் – 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர்,இரனுவா தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிக்கையில், நிபுணர் குழுக்களுடனான கலந்துரையாடலின் போது   கொவிட் தொற்று தீவிரத்திற்கு வழிவகுக்காது என்பதை உறுதிப்படுத்தினால் மட்டுமே நாடு 14 ஆம் திகதி திறக்கப்படும் என்று கூறினார்.

நாட்டைத் திறப்பதற்கு முன்னர் கோவிட் பரவுவது குறித்து விரிவான பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் ராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டதாக ‘லங்கதீப’ தெரிவித்துள்ளது.

தற்போதைய பரிந்துரைகளின்படி, பயணக் கட்டுப்பாடுகள் 14 ஆம் திகதி தளர்த்தப்பட உள்ளன.

இதற்கிடையில், கோவிட் பரவுவதை கணக்கில் எடுத்துக்கொண்டு, அடுத்த மாதம் 21 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும் என்று பல மருத்துவ நிபுணர்கள் ஏற்கனவே அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...