பயணக் கட்டுப்பாட்டை நீக்குமாறு தேரர் ஒருவர் பிரதான வீதியின் நடுவில் அமர்ந்து எதிரிப்பு ஆர்ப்பாட்டம்

Date:

தம்புள்ள பொருளாதார மையம் அருகே வீதியின் நடுவில் தேரர் ஒருவர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

திம்புலாகல விகாரை வசிக்கும் மாத்தளே ஷாசரத்ன எனும் தேரரே இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டுள்ளார்.

தேரர் வீதியின் நடுவே அமர்ந்து நாட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார். தம்புள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் இவரை அகற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

பின்னர் தம்புள்ள நகராட்சி மன்றத்தின் மேயர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து, ஜனாதிபதி செயலகத்துடன் ஒருவரை தொடர்பு கொள்ள நகராட்சி மன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பின்னர் அவர் நகரசபையில் செயலாளர் ஒருவருடன் தொலைபேசியில் பேசும் வாய்ப்பு கிடைத்ததாகவும் பின்னர் அறிக்கை இன்றை பெற்றுக்கொள்வதற்காக தேரரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரது வேண்டுகோள் என்னவென்றால், ‘நாடு மூடப்பட்டுள்ளது, ஆனால் கடைகள் திறக்கப்படுகிறது, வர்த்தகம் செய்யப்படுகிறது, நாட்டை இவ்வாறு மூடியிருப்பது எந்த அர்த்தமும் இல்லை, சரியாக நாட்டை மூடவும், மக்களுக்கு பொய் சொல்லாமல் நாடு முழுவதையும் திறக்கவும். ‘
ஜனாதிபதிக்கும் தேரர் வன்மையாக கண்டித்துள்ளார்

https://fb.watch/678mqBthYd/

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...